Screen Reader Access     A-AA+
அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் - 641663, திருப்பூர் .
Arulmigu Vazhai Thottathu Ayyan Temple, V. Ayyampalaiyam, Samalapuram - 641663, Tiruppur District [TM010053]
×
Temple History

புராண பின்புலம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன், திரு.சின்னையன் என்ற இயற்பெயர் கொண்டு விளங்கினார். சிறு வயது முதலே இடைவிடாமல் சிவ வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் சித்தர் ஒருவரால் சர்வ விஷ சம்மார மந்திரமும், பஞ்சாட்சர மந்திரமும் உபதேசிக்கப்பெற்று, தன்னை நாடி வரும் நோயுற்றவர்களுக்கும், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கைம்மாறு கருதாது சிகிச்சை அளித்து அருள்செய்து வந்தார். தெய்வபக்தி, இரக்கம், சாந்தம், பொறுமை, சத்தியம் ஆகிய அரும்பெருங்குணங்களைப்பெற்று விளங்கிய திரு.சின்னையன் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்ததால் வாழைத்தோட்டத்து அய்யன் என ஊர்மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சிவபக்தரான...